மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு

மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்களின் தாக்கம் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் வாழ்க்கையிலிருந்து பரந்த சமுதாயம் வரை, மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் மனித உணர்வுகள் மற்றும் நடைமுறைகளை பாதிக்கின்றன. மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் சமூக ஊக்குவிப்புகளாக ஊக்குவிக்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு வயதினரும் இந்த நேர்மறையான சமூக விதிமுறைகளால் உருவாக்கப்பட்ட நேர்மறையான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார்கள், இது மதுபானம் மற்றும் போதைப்பொருள் நுகர்வுக்கு மேலும் மதிப்பு சேர்க்கிறது. நிறுவப்பட்ட சமூக நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை சவால் விடுவதன் மூலமும் தகர்ப்பதன் மூலமும் இவை தீர்க்கப்பட வேண்டும்.
எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடும் வகையில் சமூகங்களை வலுவூட்டுதல்:

எதிர்பார்ப்புகளை சவால் விடும் வகையில் சமூகங்களுக்கு வலுவூட்டுதல் மூலம், சமூகத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் ஊக்குவிப்பைக் கேள்விக்குட்படுத்த உதவுகிறது. மேலும், வெவ்வேறு வயதினரை இலக்காகக் கொண்ட சமூக விளம்பரங்கள் மற்றும் விளம்பர உத்திகள் சவால் மற்றும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன் நுகர்வுக்கு மதிப்பு சேர்க்கும் சமூக நெறிமுறைகளை சவால் செய்வதும் கேள்வி கேட்பதும் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களுக்கான தேவையை குறைக்கும். போராட்டத்தை முன்னெடுப்பதற்கு சமூகங்களுக்கு சமூகங்களுக்கு வலுவூட்டுதல் மூலம், சமூகத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் உரிமையை மீட்டெடுப்பதன் மூலம், தடுப்பு மற்றும் சவாலான எதிர்பார்ப்புகளில் அவர்கள் தீவிரமாகப் பங்கேற்பதன் மூலம், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பொறுப்புகளில் இந்தத் திட்டங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சமூகங்கள் புரிந்துகொள்ள உதவியது.

சமூகங்களை வலுவூட்டுவதற்கு நாம் பயன்படுத்தும் முக்கிய உத்திகள்

கல்வி மற்றும் விழிப்புணர்வு: மதுபானம் மற்றும் போதைப்பொருட்களின் சமூக ஊக்குவிப்பு, அதன் தாக்கங்கள் மற்றும் அதன் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக முக்கியமானது. கல்வி முயற்சிகளில் கருத்தரங்குகள், சமூக உரையாடல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் சமூக விதிமுறைகளை சவால் விடும் மற்றும் ஆரோக்கியமான ஆளுமைகளை ஊக்குவிக்கும் பிரச்சாரங்கள் ஆகியவை அடங்கும். FISD இன் “மகிழ்ச்சியான குடும்பங்கள்” அணுகுமுறை குடும்ப மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பதில் கவனம் செலுத்துகிறது, இது குடும்ப மகிழ்ச்சியைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவதற்கான பின்னணியை உருவாக்குகிறது.

திறன் உருவாக்கம் மற்றும் திறன் மேம்பாடு: மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டம் சமூகங்கள் தங்கள் திறமைகளை முன்னிலைப்படுத்தவும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதில் பயன்படுத்தவும் உதவுகிறது. பகுத்தறிவு சிந்தனை மற்றும் சரியான தகவலின் மீது முடிவெடுக்கும் திறன், எதிர்பார்ப்புகளை கேள்வி கேட்கும் திறன் மற்றும் மிகவும் பொறுப்பான முறையில் தேர்வு செய்யும் உரிமை ஆகியவை இந்தத் திட்டத்தால் பலப்படுத்தப்படுகின்றன.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை ஈடுபடுத்துதல்: தனிநபர் முதல் பரந்த சமுதாயம் வரை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் அணுகுகின்றன. மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்கள் முக்கியமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைக்கின்றன. எனவே, மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்கள் சிறுவர்களையும் இளைஞர்களையும் இணைத்து தீவிரமாகச் செல்வாக்கு செலுத்தி, அவர்களை தடுப்பு நடுவடிக்கைகைகளில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கொள்கைகளை வலுப்படுத்துதல் – தற்போதைய தேசிய சூழல்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான சிறந்த சட்டங்கள், வழிமுறைகள் மற்றும் வரம்புககள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மதுபானம் மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான கீழிருந்து மேல் நோக்கிய அணுகுமுறையாக சமூகங்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் ADD திட்டமானது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.